1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 29 மே 2023 (13:00 IST)

தோனியின் கடைசி சர்வதேச போட்டியும் ரிஸர்வ் நாளில்தான் நடந்ததா?

நேற்று நடக்க இருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி மழை காரணமாக ரிஸர்வ் நாளான இன்று நடக்க உள்ளது. ரிஸர்வ் நாளில் நடந்த ஒரு போட்டியில்தான் தோனி தன்னுடைய கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை தொடரில் நியுசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதல்நாள் மழையால் பாதிக்கப்பட அடுத்தநாள்தான் இந்தியா பேட் செய்தது. ஆனால் அந்த போட்டியில் இந்தியா தோற்று உலகக்கோப்பையை விட்டே வெளியேறியது. அதனால் இன்று நடக்கும் போட்டியும் தோனிக்குக் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் எனவும் இதில் சிஎஸ்கே அணி தோற்கும் எனவும் பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தோனியோ இப்போது ஓய்வு குறித்து யோசிக்கவில்லை எனக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது