தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனம்: சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் |
- பான் இந்திய “மட்கா” படத்தின், ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
- நான் இல்லேன்னாலும் இந்திய அணி நல்லாதான் விளையாடுது… சஞ்சு சாம்சன் பதில்!
- மாலத்தீவில் குடிநீர் திட்டம் தொடக்கம்.. 110 மில்லியன் டாலர் இந்தியா உதவி..!
- இந்தியாவில் பெரிதாக ஏதோ நடக்க போகிறது: எக்ஸ் தளத்தில் பதிவு செய்த ஹிண்டன்பர்க்..!
பும்ராவுக்கு வங்கதேச தொடரில் ஓய்வளிக்க முடிவா?.. பின்னணி என்ன?
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒருநாள் என மூன்று வகையான போட்டிகளிலும் இப்போது இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்களில் பும்ராதான் நம்பர் 1 பவுலர் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லலாம்.
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் ஜாஸ்ப்ரீத் பும்ரா. அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பவுலிங்கின் மூலம் அணிக்கு வெற்றியை தேடித்தந்த அவர் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.
அதன் பின்னர் நடந்த ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள வங்கதேச தொடரிலும் அவருக்கு ஓய்வளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்து வரும் நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் முழுமையாக விளையாடவேண்டும் என்பதால் இந்த முடிவை பிசிசிஐ எடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.