தொடர்புடைய செய்திகள்
- கொரோனா ஊரடங்குக்கு பின் உங்கள் வேலை எப்படி மாறும்?
- இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை விற்பனை இல்லை - பெட்ரொல் விற்பனையாளர் சங்கம்
- பஜ்ஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ஆந்தம் – சிம்புவின் அசத்தல் பாட்டு!
- செல்லூர் ராஜு மனைவிக்குக் கொரோனா – அதிர்ச்சி தகவல்!
- நாளையோடு முடியும் பொதுமுடக்கம்: அடுத்த கட்ட நடவடிக்கை என்ன??
ஜோ ரூட் வீட்ல விசேஷம்… கேப்டனாகும் பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு தற்காலிக கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து எந்தவொரு சர்வதேசக் கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. இதனால் கிரிக்கெட் வாரியங்கள், ஒளிபரப்பு உரிமையை வாங்கிய தொலைக்காட்சிகள் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு வரும் 8 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
சௌத்தாம்ப்டனில் நடக்கும் இந்த போட்டிக்கு இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டுக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவர் விலகிக் கொள்ள பென் ஸ்டோக்ஸ் அணியை வழிநடத்த இருக்கிறார். கொரோனா ஊரடங்குக்குப் பின்னான போட்டி என்பதால் இந்த போட்டியைக் காண உலகமே ஆவலாக உள்ளது.
அடுத்த கட்டுரையில்