தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவுக்கு எதிரான டி20 : ஆஸ்.,வீரர்கள் 6 பேருக்கு ஓய்வு
- விருப்ப ஓய்வுக்குப் பின் அரசியல் கட்சியில் தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.. எந்த கட்சி?
- ஓய்வுக்காக மும்பை செல்லும் நடிகர் சூர்யா!
- பயிற்சியாளர் பதவியை தொடர்வாரா ராகுல் டிராவிட்?
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சுனில் நரேன் ஓய்வு: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
பயிற்சியாளர் பொறுப்பு… டிராவிட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தும் பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். ஆனால் அவர் தலைமையில் முக்கியமான சில கோப்பை தொடர்களில் இந்திய அணி தோற்று வெளியேறி வருகிறது.
ஆனால் இப்போது நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்று மூன்றாவது முறையாகக் கோப்பையை வெல்ல இருந்த வாய்ப்பைத் தவறவிட்டது.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரோடு டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில் தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு வி வி எஸ் லஷ்மன் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இப்போது ராகுல் டிராவிட்டிடம் பிசிசிஐ தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லபப்டுகிறது. அதன்படி தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் டிராவிட் இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கவேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிசிசிஐ –யின் இந்த அழுத்தத்தை டிராவிட் ஏற்பாரா என்பது விரைவில் தெரியவரும்.
அடுத்த கட்டுரையில்