தொடர்புடைய செய்திகள்
- இந்த வெற்றி முக்கியமான ஒன்று… பவுலர்களிடம் நான் இதைதான் ஆலோசித்தேன் – கேப்டன் கில் கருத்து!
- இலங்கைத் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டன் இல்லையாம்… இந்த வீரர்தானாம்!
- எனக்கு மட்டும் ஏன் 5 கோடி… எல்லோருக்கும் சமமாகக் கொடுங்கள்.. பிசிசிஐக்கு டிராவிட் கோரிக்கை!
- கம்போடியா நாட்டில் 3000 இந்திய பெண்கள் அடிமையா? நிர்வாணமாக சித்திரவதை? அதிர்ச்சி தகவல்..!
- மகளிர் டி20 போட்டி: 84 ரன்களில் சுருண்ட தெ.ஆ. அணி.. விக்கெட் இழப்பின்றி இந்தியா அபார வெற்றி..!
மறுபடியும் முதல்ல இருந்தா?... சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் செல்ல மறுக்கும் பிசிசிஐ?
8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எப்படியும் இந்திய அணி கலந்துகொள்ளும் என கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இந்த தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் ஒரே க்ரூப்பில் ஏ பிரிவில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. இரு அணிகள் மோதும் போட்டி மார்ச் 1 ஆம் தேதி நடக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்திய அணி மோதும் போட்டிகள் அனைத்தையும் லாகூர் மைதானத்தில் நடத்த வேண்டும் என பிசிசிஐ, ஐசிசிக்கு கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்பட்டது. இந்தியா vs பங்களாதேஷ் மற்றும் இந்தியா vs நியுசிலாந்து அணிகள் ஆகிய போட்டிகளை பிப்ரவரி 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ளதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்போது மீண்டும் பிசிசிஐ, பாகிஸ்தான் செல்ல முடியாது என ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இலங்கையில் நடத்துமாறும் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.