1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கொரோனா வைரஸ்
  4. Coronavirus infects cells of the intestine in human

மனித சிறுகுடலை விரும்பி உண்ணும் கொரோனா: பதர வைக்கும் உண்மை!

கொரோனா
கொரோனா வைரஸ் நுரையீரல் மட்டுமின்றி சிறுகுடலையும் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
 
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43.39 லட்சமாக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை 16,00,728 ஆக உள்ளது, அதேசமயம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,92,804 ஆக உயர்ந்துள்ளது. 
 
இது நாள் வரையில் கொரோனா நுரையீரலை தாக்கி முச்சுதிணறல் ஏற்படுத்துகிறது என்றுதால் சொல்லப்பட்டு வந்தது, ஆனால் அவை சிறுகுடலையும் தாக்குகிறது என சீன ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. 
 
அதாவது, வாய் வழியாக மனைத உடலுக்குள் நுழையும் கொரோனா சிறுகுடலில் உள்ள ஏசிஇ-2 என்ற புரதத்தை கொரோனா வைரஸ் விரும்பி உண்கிறதாம். இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு பின்வரும் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அவை, 
 
குடலை கொரோனா தாக்கினால் வயிற்றுப்போக்கு, வாந்தி, அடிவயிற்றில் வலி ஆகியவை ஏற்படும். 
 
சிறுகுடலை கொரோனா தாக்கியிருந்தால் கொரோனா வைரஸ் மனித மலத்திலும் காணப்படுகிறது. 
 
நுரையீரலை கொரோனா முழுவதுமாக தாக்கினாலும், அடுத்து சிறுகுடலில் அவை வாழ துவங்கிவிடுகிறது. 
அடுத்த கட்டுரையில்
பளபளப்பான சருமத்தை பெறவேண்டுமா...? இதோ இருக்கு ஃப்ரூட்ஸ் ஸ்கரப்..!!