வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2019 (12:03 IST)

குழந்தைக்கு என்ன ஆனது? கதறி அழுத சரவணன்! பிரபல நடிகர் உருக்கம்!

பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்ற சரவணன், பேருந்தில் பெண்களை உரசியதாக கூறியதால் அந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். சரவணன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென நிகழ்ச்சியில் இருந்து  வெளியேறியதால் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. 


 
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சரவணன் நேராக சேலத்தில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு சென்றுள்ளார்.      அவருடைய குழந்தை கடந்த மூன்று நாட்களாகவே உடல் நல குறைவால் சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை சரவணனுடன் போனில் பேசிய நடிகரும் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளருமான பரணி தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.   
 
மேலும் பரணியுடன் சரவணன் போனில் பேசும்போது, இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து புது வாழ்க்கையை துவங்கலாம் என எண்ணியிருந்தேன் ஆனால் தனக்கு கெட்ட பெயர் வந்துவிட்டதாக கூறி கதறி அழுதாராம்.