வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 1 ஆகஸ்ட் 2020 (07:10 IST)

உங்கப்பா இல்லாமல் சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க? அபிஷேக் பச்சன் பளார் ரிப்ளை!'

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக ஐஸ்வர்யா மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோர் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் அபிஷேக் பச்சனிடம் இணையவாசி ஒருவர் தற்போது உங்களின் தந்தை மருத்துவமனையில் இருக்கிறாரே நீங்கள் எப்படி சாப்பிடுவீர்கள் என்று அப்பா அமிதாப் பச்சனின் பணத்தில் தான் அபிஷேக் பச்சன் வாழ்ந்து வருவதாக கூறி மறைமுகமாக கிண்டலடித்தார்.

அந்த ஆசாமிக்கு பதிலளித்த அபிஷேக் பச்சன், " ஆம்,  நாங்கள் இருவருமே மருத்துவமனையில் இருப்பதால் சேர்ந்து தான் சாப்பிடுகிறோம் என நெத்தியடி பதில் கொடுத்தார். இதனை சுதாரித்துக்கொண்ட அந்த நபர் விரைவில் குணமடையுங்கள் சார் பதிலளித்தார். அதற்கு அபிஷேக், எங்களை போன்ற சூழல் உங்களுக்கு ஒருபோதும் வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன். பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள். உங்களின் வாழ்த்துக்கு நன்றி மேடம் என்று பதில் அளித்தார்.