1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (11:54 IST)

LIVE 370 நீக்கம், ஜம்மு காஷ்மீர் யூனியன்பிரதேசமாக்கப்படும் - அமித்ஷா பரிந்துரை

11.44 கூச்சல் தொடர்ந்ததால், இரண்டு உறுப்பினர்களை வெளியேற்றும்படி அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

11. 40- வெங்கய்யா நாயுடுவை பார்த்து - நீங்கள் அவசரநிலையால் பாதிக்கப்பட்டவர், இப்போது அவசரநிலை திரும்பி வந்துள்ளது, இது ஜனநாயகப் படுகொலை என்றார் வைகோ. இது அர்ஜன்சி - எமர்ஜன்சி அல்ல என்றார் வெங்கய்ய நாயுடு.

11.38 - இந்தப் பரிந்துரைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கம் எழுப்புவது தொடர்ந்தது. ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கான பரிந்துரையை முன்வைத்தார் அமித்ஷா. ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றம் இருக்கும். லடாக் தனி யூனியன்பிரதேசமாக இருக்கும். அதற்கு சட்டமன்றம் இருக்காது.

11. 36 - மசோதாக்களின் நகல் முன்கூட்டியே வழங்கப்படவில்லை என்று திமுக உறுப்பினர் திருச்சி சிவா ஆட்சேபனை தெரிவித்தார்.

11.28 அமித்ஷா இந்தியில் பேசினார். கூச்சல் குழப்பம் தொடர்ந்தது.

11.25 AM:ஒரு சட்டம் தவிர, பிற சட்டங்களுக்கான அச்சிடப்பட்ட நகல்கள் வழங்கப்படவில்லை என்று டெரக் ஓ பிரையன் எழுப்பிய பிரச்சனையில் நியாயமிருப்பதாக தாம் கருதுவதாக அவைத்தலைவர் வெங்கைய நாயுடு கூறினார். ஆனால், தொடர்ந்த அவையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டுக்கொண்டே இருந்ததால், பிற மசோதாக்களையும் தாக்கல் செய்யும்படி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அழைத்தார் வெங்கய்யா நாயுடு.

BREAKING 11.20 AM - ஜம்மு காஷ்மீர் சிறப்புரிமை இரண்டாவது திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில்அறிமுகப்படுத்தினார். அப்போது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்குவதற்கு இந்த மசோதா முன்மொழிவதாக அறிவித்தார்.

11:15 AM அமித் ஷாவை பேசவிடாமல் கூச்சலிடும் எம்பிக்கள்
ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து அமித் ஷா பேசுகையில், அவரை பேச விடாமல் எம்பிக்கள் கூச்சலிடத் தொடங்கினார்கள். 
இதனால் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 
ஆனால், கூச்சலுக்கு மத்தியிலும் தனது உரையை வாசித்தார் அமித் ஷா.

11:10 AM நாடாளுமன்றத்தில் கூச்சல்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய சூழல் குறித்தும் முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார் குலாம் நபி ஆசாத்.
இது தொடர்பாக பேச நேரம் ஒதுக்கப்படும் என்று கூறினார் வெங்கையா நாயுடு.
ஒரே நாளில் சட்டத்திருத்தம் கொண்டுவர அனைத்து உரிமைகள் இருப்பதாகவும், ஆனால் இதனை படிக்க போதிய நேரம் அளிக்கப்படவில்லை என்றும் கூறினார் மேற்கு வங்கத்தின் டெரிக் ஓ பிரயான்.

11:00 AM நாடாளுமன்றம் வந்தடைந்தார் பிரதமர் மோதி

10:45 AM சட்டப்பிரிவு 370 மற்றும் 35A
இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற வழிவகை செய்கிறது.

1947ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஜம்மு காஷ்மீர் தனிச்சையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என அம்மாநிலத்தின் கடைசி மகாராஜாவாக இருந்த ராஜா ஹரி சிங் விரும்பினார். ஆனால் பின்னர் சில நிபந்தனைகளுக்கு பிறகு, இந்தியாவுடன் அம்மாநிலத்தை சேர்க்க ஒப்புக் கொண்டார்.

அந்த நேரத்தில்தான், இந்திய அரசமைப்பு சட்டத்தில், பிரிவு 370 இயற்றப்பட்டு, அதன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

அம்மாநிலத்தில் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை குறித்து சட்டம் இயற்ற, நாடாளுமன்றத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், அம்மாநிலத்துக்கென தனி அரசமைப்பு கோரப்பட்டது.

1951ஆம் ஆண்டில், ஜம்மு காஷ்மீருக்கு என தனியே சட்டமன்றம் கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. நவம்பர் 1956 அன்று அம்மாநிலத்துக்கான அரசமைப்பு எழுதி முடிக்கப்பட்டு, 1957ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சிறப்பு அந்தஸ்து அமலுக்கு வந்தது.

35- என்ன சொல்கிறது?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 35-ஏ காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கியுள்ளன. அதன்படி, காஷ்மீர் மாநில மக்களே அங்கு நிரந்தர குடிகள். எனவே, வெளிமாநிலத்தைச் சேர்ந்த மக்கள் காஷ்மீரில் எந்தவொரு அசையா சொத்தையும் வாங்க முடியாது; மாநில அரசின் நலத்திட்டங்களால் பயனடைய முடியாது.

10:30 AM காஷ்மீர் விவகாரத்தில் மோதி அரசாங்கம் முக்கிய முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து நீக்கப்படலாம் என்று யூகங்கள் நிலவுகின்றன.

எனினும் அமித் ஷாவின் நாடாளுமன்ற உரையின் முடிவில் இந்த விவகாரம் குறித்து தெளிவான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10: 18 AM 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் அமித் ஷா

10: 14 AM பிரதமர் வீட்டில் நடைபெற்ற கேபினட் கூட்டம் முடிவடைந்தது

10: 12 AM மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் போரட்டம்

காஷ்மீரில் நிலவி வரும் சூழலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மக்கள் ஜனநாயக கட்சி எம்பிக்களான நசீர் அஹமத் மற்றும் மிர் மொஹமத் ஃபயாஸ் ஆகியோர் நாமாளுமன்ற வளாகத்தில் போரட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்

10:08 AM காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்
நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

10:05 AM கூடுகிறது கேபினட்
காஷ்மீர் விவகாரம் தீவிரமாக இருக்கும் நிலையில் இன்று கேபினட் கூடுகிறது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10:01 AM ஜம்மு நகரில் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சஜத் லோன் ஆகியோர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனை ஸ்ரீநகரில் உள்ள செய்தியாளர் மஜித் ஜஹாங்கிர் உறுதிபடுத்தினார்.