1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 5 பிப்ரவரி 2022 (11:09 IST)

டெல்லி, ஐம்மூ மற்றும் காஷ்மீரில் பகுதியில் உணரப்பட்ட நில அதிர்வு

இன்று காலை 9:45 மணியளவில் ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம், தகவல் வெளியிட்டுள்ளது.


இந்த நிலநடுக்க அதிர்வு டெல்லி - என்சிஆர் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உணரப்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் மதிப்பாய்வின்படி, 9:16 PST மணிக்கு 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து வடகிழக்கே 259 கிமீ தொலைவிலும், தஜிகிஸ்தானின் துஷான்பேக்கு தென்கிழக்கே 317 கிமீ தொலைவிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இருந்து வட-வடமேற்கில் 346 கிமீ தொலைவிலும், குல்மார்க்கிலிருந்து வடமேற்கே 395 கிமீ தொலைவிலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு வடமேற்கே 422 கிமீ தொலைவிலும் ஏற்பட்டது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தகவல் வெளியிட்டுள்ளது.