தொடர்புடைய செய்திகள்
- மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு? ஒருசில பகுதிகளுக்கு மட்டும் தளர்வுகளா?
- செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் கருப்பு பூஞ்சை தொற்று பலி!
- பீட்டா நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் – அமுல் நிறுவனம் கோரிக்கை!
- 96 க்ளைமேக்ஸில் அதை எதிர்பார்த்தோம்… நடிகையிடம் கூறிய ரசிகர்கள்!
- கொரோனா வார்டு திறந்து ஓராண்டு நிறைவு! – கூட்டமாக டான்ஸ் ஆடிய முன்கள பணியாளர்கள்!
கொரோனா: பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விடக் குறையும் – ஆர்பிஐ
நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததைவிட ஒரு சதவிகிதம் குறையும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், வழக்கமான பருவமழை மூலம் பொருளாதாரம் மீட்சிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சி 10.5 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது 9.5 சதவிகிதமாக குறையும் என சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.
கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே குறைவாக இருக்கும் வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
ரெப்போ விகிதம் 4 சதவிகிதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவிகிதமாகவும் தொடர்ந்து நீடிக்கிறது.
பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ரெப்போ விகிதத்தை 115 புள்ளிகள் குறைத்து ஆர்பிஐ நடவடிக்கை எடுத்திருந்தது.
அடுத்த கட்டுரையில்