1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 4 ஜூன் 2021 (12:32 IST)

பீட்டா நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் – அமுல் நிறுவனம் கோரிக்கை!

பீட்டா நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என அமுல் நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்தில் அமுல் நிறுவனம் பீட்டா இந்தியா  ஆகியவற்றுக்கு இடையே வார்த்தை மோதல்கள் எழுந்துள்ளன. பீட்டா இந்தியா நிறுவனம் அமுல் நிறுவனத்தை தாவரங்களின் பாலை பயன்படுத்த சொல்லி அழுத்தம் கொடுத்ததை அடுத்து தொடங்கியது.இந்நிலையில் நாடெங்கும் போலிச் செய்திகளை பரப்பி வரும் பீட்டா நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என அமுல் நிறுவனம் அமுல் நிறுவனத்தின் துணைத்தலைவர் வலம்ஜி ஹும்பல் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.