கார் விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா!... ஓட்டுனர் மரணம்!...

Mahendran
திங்கள், 2 மார்ச் 2026 (15:13 IST)
தமிழில் பல சீரியல்களில் நடித்தவர்  தேவிப்பிரியா. கடந்த 20 வருடங்களுக்கு மேல் இவர் சீரியல்களில் நடித்து வருகிறார்.. சின்னத்திரை நடிகையாக கலைமாமணி விருதையும் இவர் பெற்றிருக்கிறார். சீரியலில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் இவர் வலம் வருகிறார். இவர் நடித்த அண்ணாமலை, அத்திப்பூக்கள், சந்திரலேகா போன்ற சீரியல்கள் சீரியல் ரசிகைகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது..

இந்நிலையில்தான், இவரின் கார் விபத்தில் சிக்கி ஒருவர் மரணம் அடைந்திருக்கிறார்.. சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு அவர் சென்று கொண்டிருந்த போது பெரம்பலூர் அருகே சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் அவர் சென்று  கொண்டிருந்த காரின் டயர் பஞ்சரானது. எனவே காரை சாலையோரம் நிறுத்தி கார் ஓட்டுநர் முத்து கணேஷ் டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.. தேவிப் பிரியாவும் அவரது உதவியாளர் திவாகரும் காரிலிருந்து சில அடி தூரம் தள்ளி நின்று கொண்டிருந்தனர்..

அப்போது அடையாளம் தெரியாமல் வேகமாக வந்த ஒரு கார் பின்னாலிருந்து தேவி பிரியாவின் கார் மீது மோதியது.. அதில் கார் மொத்தமாக சிதைந்தது.. அதில் டயரை மாற்றிக் கொண்ட ஓட்டுனர் முத்து கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேவி பிரியாவின் உதவியாளர் திவாகர் பலத்த காயத்தோடு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.. இதில் தேவிப்பிரியா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்..

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடியை தாண்டிய கருப்பு!.. சூர்யா செம ஹேப்பி!...

தியேட்டர் டிக்கெட் விலையை 250 ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும்.. முதல்வருக்கு வேண்டுகோள்..

தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் மாரி செல்வராஜ்: கதாநாயகன் இவரா?

சரக்கு தீர்ந்துடுச்சு.. கடைய மூடுங்க! - திரிஷ்யம் 3 படத்தை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்!

திரிஷ்யம் 3 படந்தால் கவுந்த கருப்பு!.. கலெக்‌ஷன் போச்சே!..

அடுத்த கட்டுரையில்
Show comments