ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 செப்டம்பர் 2021 (08:31 IST)

பாராலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி

டோக்கியோ பாராலிம்பிக் போட்டித்தொடரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. 
 
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உலக நாடுகள் பல பங்கேற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலர் பல பதக்கங்களை வென்று வருகின்றனர்.
 
அந்த வகையில் ஆடவர் ஒற்றையர் பேட்மின்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில் பிரமோத் பகத் 21-11, 21-16 என்ற நேர் செட்டில் ஜப்பானின் ஃபுஜிஹாராவை வீழ்த்தினார்.