வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By J.Durai
Last Modified: திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (19:01 IST)

APL Season-4,காலை 6:30 மணியளவில் துவங்கி மாலை 6-மணி அளவில் முடிந்தது!

சென்னை நேரு வெளியரங்கத்தில்APL Season -4 காலை 6:30 மணியளவில் துவங்கி மாலை 6 மணி அளவில் முடிந்தது.
 
இப் போட்டியானது கடந்த 4 வருடமாக  நடைப்பெற்று வருகிறது.
 
குறிப்பாக இந்த 4-ஆம் வருடத்தில் 3 தலை முறையினரான 4 வயது முதல் 55 - வயது வரையிலான தடகள வீரர்கள் பங்கு பெற்றனர். 
 
இந் நிகழ்விற்கு  சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் ஆர்யா, ரெட் ஜெயண்ட் மூவீஸ் M.செண்பகமூர்த்தி, சுப்ரியா சாஹீ ஐ. ஏ.எஸ், மயில்வாகனன் ஐ.பி.எஸ், DAC Developers  சதீஷ்குமார், ஸ்ரீகோகுலம் குழும நிறுவனர் வி.சி. பிரவீன்  மற்றும் விக்கான் ஷெல்டர்ஸ் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.