Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு 300 கோடி டார்கெட் விதிக்கும் டாஸ்மாக்..

Written By Arun Prasath
Updated: திங்கள், 21 அக்டோபர் 2019 (08:33 IST)
தீபாவளியை முன்னிட்டு ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு விதிக்கப்பட்டுள்ளது.

சாதாரண நாட்களிலேயே மது விற்பனை களைகட்டும். இதில் பண்டிகை நாட்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கொண்டாட்ட நாட்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த 3 நாட்களில் ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 25 ஆம் தேதி, 80 கோடிக்கும், 26 ஆம் தேதி ரூ.130 கோடிக்கும், தீபாவளி அன்று 27 ஆம் தேதி ரூ.175 கோடிக்கும் மது விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அனைத்து மதுக்கடைகளுக்கும் டாஸ்மார்க் நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வரும் 15 நாட்களுக்கு தேவையான மது வகைகளை 3 நாட்களில் விற்பனை செய்வதற்காக இருப்பு வைத்துக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.320 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் எதிர்பாராத விதமாக ரூ.600 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

அயோத்தி ராமர் கோவில் அர்ச்சகர்களுக்கு யூனிபார்ம்.. ஷேவ் செய்து நீட்டாக இருக்க வேண்டும்..

கோவில் எதிரே நூற்றுக்கணக்கான செருப்புகள்.. தன்னுடைய செருப்பை சாட்ஜிபிடி உதவியால் கண்டுபிடித்த இளைஞர்...

நயினார் நாகேந்திரனின் சர்ச்சைக்குரிய பேச்சு.. கம்யூனிஸ்ட் தலைவர் பெ சண்முகம் கண்டனம்..

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர்.. முழு விவரங்கள்...!

முன்னாடியெல்லாம் டிவியில நாடகம் பார்ப்போம்.. இப்ப சட்டசபையை பார்க்கிறோம்.. தவெக எம்.எல்.ஏவிடம் தெரிவித்த பெண்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments