மாணவர்களுக்கு கோடை விடுமுறை: யாருக்கு, எத்தனை நாட்கள் ?

புதன், 2 மார்ச் 2022 (14:43 IST)
12 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு இந்தாண்டு 12 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பொதுத்தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
 
தேர்வுகள் மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரத்திற்குள் முடிவடையும் நிலையில் கோடை விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே இருந்தது. இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு தவிர அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 13 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. 
 
அதன்படி 1 - 9 வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தாண்டு 30 நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு இந்தாண்டு 23 நாட்கள் கோடை விடுமுறை. மேலும் 12 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு இந்தாண்டு 12 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆண்டுதோறும் பொதுத்தேர்வு முடிந்து ஒரு மாத காலம் விடுமுறை வழங்கப்படும் நிலையில் தற்போது வழங்கப்படாதது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

பழனி கோவில் நில விவகாரத்தில் நடந்தது என்ன?.. பத்திரம் சொல்வது என்ன?..

டெங்கு நோயை கட்டுப்படுத்த ஜப்பானின் தடுப்பூசி.. மத்திய அரசு அங்கீகாரம்...!

பாஜக ஆட்சிக்கு எதிராக திரண்ட இளைஞர்கள்.. தமிழகம் போல் மத்தியிலும் ஆட்சியை மாற்றுவார்களா ஜென் சி?

பேய் வீட்டில் ஒரு நைட் தங்கினா ரூ.52 ஆயிரம் சம்பளம்!.. நீங்க ரெடியா?..

லிவ்விங் டூ கெதரில் இருந்தால் 5 வருஷம் சிறை!.. மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments