2 சீட் வச்சிக்கிட்டு இவங்க பண்ற அலப்பறை இருக்கே!.. திருமாவை நக்கலடித்த சனம் ஷெட்டி!..

சனி, 9 மே 2026 (15:30 IST)
நடிகர் விஜய் தவெக என்கிற அரசியல்கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறினார். அதன்பின் அவர் பல தனிபப்ட்ட தாக்குதல்களை சந்தித்தார். ஆனாலும், தன்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டார் விஜய்., அதன்காரணமாக சட்டமன்ற தேர்தலில் அவரின் கட்சிக்கு மக்கள் பெருமளவு வாக்களித்தனர்.

அதனால், 108 தொகுதிகள் கிடைத்தது. ஆனாலும், விஜயால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஏனெனில், ஆட்சியமைக்க இன்னும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ், கம்யூனிஸ் கட்சிகள் ஆதரவு கொடுத்தாலும் இன்னும் 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, தவெகவின் முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.

ஒருபக்கம், இதுவரை ஆட்சியமைக்க ஆளுநர் இதுவரை அழைக்கவில்லை. இது விஜயின் ரசிகர்களையும், பொதுமக்களையும், திரையுலகிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமூகவலைத்தளங்கலில் பலரும் தங்களின் கோபத்தையும், ஆதங்கத்தையும் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக ஆளுநரை கட்டுப்படுத்தும் பாஜகவையும், இதுவரை எந்த பதிலும் சொல்லமால் இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனையும் பலரும் திட்டி வருகிறார்கள். ஏனெனில், நாங்கள் ஆதரவு கொடுக்கவேண்டுமானால், விசிகவுக்கு அமைச்சர், துணை முதல்வர் பதவி ஆகியவற்றை கேட்பதாக தெரிகிறது.

இந்நிலையில், நடிகை ஷனம் ஷெட்டி தனது எக்ஸ் தளத்தில் ‘ஒரு சீட்.. இரண்டு சீட் வச்சிருக்கிறவங்க பண்ற அட்ராசிட்டி இருக்கே’ என நக்கலடித்திருக்கிறார்.

எல்லாம் காட்டு

நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments