கேடில் விழு செல்வம் குறளை சுட்டிக்காட்டிய பிரதமர்! – புதுச்சேரியில் உரை!

வியாழன், 25 பிப்ரவரி 2021 (12:39 IST)
புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் வழக்கம்போல திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ள பிரதமர் மோடி முதலாவதாக புதுச்சேரி சென்றுள்ளார். அங்கு ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். அங்கு சில நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அவர் பாஜக கட்சி பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார்.

அப்போது கல்வி குறித்து பேசிய அவர்

” கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.”

என்ற குறளை மேற்கோள் காட்டி பேசினார். அதன் பொருள் “ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.” என்பதாகும்.

மேலும் தற்போது புதுச்சேரியில் காற்று மாறி வீசுவதாகவும், மக்கள் காங்கிரஸ் இல்லாத சுதந்திரத்தை அனுபவிப்பதாகவும் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments