Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 29 டிசம்பர் 2021 (13:38 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தமிழகத்தில் கடந்த மாதம் முதலாக வடகிழக்கு பருவக்காற்றால் தொடர் மழை பெய்து வந்தது. மேலும் வங்க கடலில் தொடர்ந்து அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் பல மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமான மழை பொழிந்தது. கடந்த சில நாட்களாக புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகாத நிலையில் மிதமான அளவில் மழை பெய்து வந்தது. 
 
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜன. 2-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

எல்லாம் காட்டு

2 மணி நேரம் டாய்லெட்டில் இருந்து புரட்சி செய்தவர் உதயநிதி: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

3 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் தேக்கம்.. ஸ்டாலின் படம் இருப்பதால் சிக்கல்..

இன்று தமிழக அரசு பட்ஜெட் தாக்கல்!. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?..

இன்சூரன்ஸ் இல்லாவிட்டால் பெட்ரோல், டீசல் கிடையாதா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..

நள்ளிரவில் சென்னை வந்த உதயநிதி.. முதல்வேளையாக தந்தையை சந்தித்து முக்கிய ஆலோசனை..

அடுத்த கட்டுரையில்
Show comments