நீட் தேர்வில் மாணவிகள் உள்ளாடைகளை களையச் செய்த விவகாரம்: 5 பெண்கள் கைது

புதன், 20 ஜூலை 2022 (17:00 IST)
கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் உள்ளாடைகளை களையச் செய்த விவகாரத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
கடந்த ஞாயிறு அன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தபோது கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகள் சிலரின் உள்ளாடைகளை கழற்றச் சொல்லி வலியுறுத்தி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது
 
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை பணியாளர்கள் மூன்று பேர் மற்றும் கல்லூரி ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 5 பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது 
 
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்தது என்று குறிப்பிட்டது. சர்ச்சைக்குரிய தேர்வு மையத்தின் ஜன்னல் கதவுகள் அடித்து நொறுக்கப்பட்டன என்பதும் இதனையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

எல்லாம் காட்டு

லிவ்விங் டூ கெதரில் இருந்தால் 5 வருஷம் சிறை!.. மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!..

சென்னையில் கள்ளநோட்டு கும்பல் 3 பேர் கைது.. சர்வதேச கும்பலுடன் தொடர்பா? விசாரணையில் அதிர்ச்சி தகவல்...

அனிதா ராதாகிருஷ்ணனை மீண்டும் கைது செய்ய முயற்சி.. மயக்கம் வருவதாக கூறியதால் முயற்சி கைவிடப்பட்டதா?

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது.. கண்டனம் தெரிவித்த திமுகவுக்கு தவெக பதிலடி..

டெல்லியில் வலுக்கும் போராட்டம்!.. ராஜினாமா செய்கிறாரா தர்மேந்திர பிரதான்!...

அடுத்த கட்டுரையில்
Show comments