Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவிப்பு!

Written By Mahendran
Updated: சனி, 3 டிசம்பர் 2022 (18:41 IST)
அதிமுகவை சேர்ந்த கோவை செல்வராஜ் திடீரென அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாகப் பிரிந்து இருக்கும் நிலையில் ஓபிஎஸ் அணியில் கடந்த சில மாதங்களாக இருந்தவர் கோவை செல்வராஜ் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது அவர் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் அரசியலில் இருந்து விலக மாட்டேன் என்றும் விரைவில் நல்ல முடிவை எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்
 
திராவிட பாரம்பரியத்தில் தான் தொடர்ந்து இருப்பேன் என்றும் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவருமே என் அம்மாவின் உயிரை காப்பாற்ற தவறிய துரோகிகள் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் அடுத்த கட்டமாக எந்த கட்சியில் இணைவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

அயோத்தி ராமர் கோவில் அர்ச்சகர்களுக்கு யூனிபார்ம்.. ஷேவ் செய்து நீட்டாக இருக்க வேண்டும்..

கோவில் எதிரே நூற்றுக்கணக்கான செருப்புகள்.. தன்னுடைய செருப்பை சாட்ஜிபிடி உதவியால் கண்டுபிடித்த இளைஞர்...

நயினார் நாகேந்திரனின் சர்ச்சைக்குரிய பேச்சு.. கம்யூனிஸ்ட் தலைவர் பெ சண்முகம் கண்டனம்..

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர்.. முழு விவரங்கள்...!

முன்னாடியெல்லாம் டிவியில நாடகம் பார்ப்போம்.. இப்ப சட்டசபையை பார்க்கிறோம்.. தவெக எம்.எல்.ஏவிடம் தெரிவித்த பெண்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments