1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain in 11 districts of tamil nadu today

இன்று காலை 10 மணிக்கு மேல் கனமழை பெய்யும்: 11 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

Rain
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதை எடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் அதாவது 10 மணிக்கு மேல் சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்
 
மேலும் தமிழகம் முழுவதும் பரவலாக இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று பள்ளி கல்லூரி மற்றும் அலுவலக வேலை நாள் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
அகதிகள் முகாமில் வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி..!