வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (08:35 IST)

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான இறுதி ஒதுக்கீடு..! விவரங்கள் இன்று வெளியீடு..!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் முதல் சுற்றுக் கலந்தாய்வில் கல்லூரிகளில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இறுதி ஒதுக்கீட்டு விவரங்கள் இன்று வெளியாகிறது.
 
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான பொது கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த 21-ம்தேதி தொடங்கியது. அரசு ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 28,819 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசையில் இடம்பெற்றுள்ள 13,417 பேரும் இணையவழியாக பதிவு செய்து கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்வது கடந்த 27-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
 
இந்நிலையில், இறுதி இடஒதுக்கீடு விவரங்கள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மேலும், இறுதி ஒதுக்கீட்டு உத்தரவுகளை பெற்றவர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 7 ஆயிரத்து 628 மாணவர்களுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1,806 மாணவர்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.