சென்னை துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரின் வேட்பு மனு ஏற்பு

ஞாயிறு, 21 மார்ச் 2021 (15:45 IST)
சென்னை துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரின் வேட்பு மனு ஏற்பு
சென்னை துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளரின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த வேட்பு மனு ஏற்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சென்னை துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோத் பி செல்வம். இவரது வாக்காளர் அடையாள அட்டையில் வினோத் என்ற பெயர் மட்டுமே இருந்ததாகவும் பிரமாண பத்திரத்தில் வினோத் பி செல்வம் என குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் இதனால் பெயர் மாறுபடுவதால் வேட்புமனுவை நிறுத்தி வைப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் இன்று காலை வினோத் பி செல்வம் தனது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு, கல்லூரி மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்ததில், அதில் வினோத் பி செல்வம் என இருந்ததால் அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
 
இந்த நிலையில் துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளரின் வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

எல்லாம் காட்டு

விஜய் அமைச்சரவை நாளை விரிவாக்கம்!.. விசிக, ஐ.யூ.எம்.எல். இடம் பெறுமா?..

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து!.. விரைவில் விடுதலை?!.. தமிழக அரசு அதிரடி!..

மத்திய அரசை விரைவில் கவிழ்ப்போம்.. மம்தா பானர்ஜியின் அதிரடி சபதம்!

காற்றிலிருந்து பெட்ரோல், டீசல் தயாரிக்கும் தொழில்நுட்பம்.. சக்சஸ் ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.10?

எரிபொருள் விலை உயர்வு!. Swiggy, Zomato கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு!...

அடுத்த கட்டுரையில்
Show comments