திமுக வழக்கறிஞர் கார் மீது பெட்ரோல் குண்டு விச்சு: சென்னையில் பரபரப்பு!

புதன், 30 மார்ச் 2022 (08:27 IST)
திமுக வழக்கறிஞர் கார் மீது பெட்ரோல் குண்டு விச்சு: சென்னையில் பரபரப்பு!
சென்னையில் திமுக வழக்கறிஞர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்ம நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை எண்ணூர் பகுதி திமுக வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவர் தனது காரில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென கார் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.
 
அதன் பிறகு வழக்கறிஞர் ஹரிஹரனை பயங்கர ஆயுதங்களால் தாக்க முயற்சித்ததாகவும் ஆனால் லேசான காயங்களுடன் வழக்கறிஞர் ஹரிஹரன் உயிர் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஹரிஹரனிடம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 

எல்லாம் காட்டு

இனப்பெருக்கத்தில் இருந்த சிங்கங்கள்!. அருகில் சென்ற வாலிபர் மரணம்!...

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை: மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி

காவிரி நீரை உடனே பெறுக; இல்லையேல் காங்கிரஸ் அமைச்சர்களை நீக்குக: இபிஎஸ் அதிரடி சவால்

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு கட்டாயம்: முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

இனிமே விஜய்தான் தலைவர்!.. தவெகவுக்கு தாவும் திமுகவினர்!.. அதிர்ச்சியில் அறிவாலயம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments