கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தீபாவின் கார் டிரைவர் திடீர் கைது

புதன், 17 ஜனவரி 2018 (05:07 IST)
சமீபத்தில்  எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் தலைவர் தீபா தனது கார் டிரைவரும் கட்சியின் முக்கிய நிர்வாகியுமாக இருந்த ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார். இந்த நிலையில் நேற்று திடீரெனா ராஜாவை மாம்பலம் போலீசார் கைது செய்தனர்

ராஜா கைதான தகவல் அறிந்ததும் தீபா மாம்பலம் காவல்நிலையத்திற்கு சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆட்டோ டிரைவர் ஒருவர் ராஜாவின் காரை உரசிவிட்டதாகவும், இதனால் ராஜா, அந்த ஆட்டோ டிரைவராக அடித்ததாகவும் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டதாக போலீசார் தீபாவிடம் விளக்கினர். இருப்பினும் தொடர்ந்து தீபா போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

கட்சியில் இருந்து நீக்கிய ஒருவருக்காக தீபா ஏன் போலீசாருடன் வாக்குவாதம் செய்கிறார் என்பது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் புரியாத புதிராக இருந்தது.

எல்லாம் காட்டு

பொய்க்கால் குதிரை அரசு சில காலம்தான்!. அதிமுக ஆட்சி விரைவில்!.. பழனிச்சாமி அறிக்கை!...

30 வருட கோரிக்கையை நிறைவேற்றிய விஜய்!.. பொதுமக்கள் மகிழ்ச்சி!...

இரண்டு யானைகள் மோதல்!.. இடையில் சிக்கி சென்னை பெண் மரணம்!..

இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு முதல் ‘பாரத் கௌரவ்’ சுற்றுலா ரயில்: கட்டணம் எவ்வளவு?

சிறையில் இருக்கும் பெண்களின் குழந்தைகளின் கல்வி நிலை: அறிக்கை தாக்கல் செய்யக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments