கலெக்டர் ரோஹினி மீண்டும் இடமாற்றம் – எந்த துறை தெரியுமா ?

சனி, 16 நவம்பர் 2019 (07:49 IST)
சமூக வலைதளவாசிகளுக்கு மிகவும் தெரிந்த கலெக்டரான ரோஹினி மத்திய அரசின் உயர்கல்வித்துறை துணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த கலெக்டர் ரோஹினி தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார் ஆனார். அவர் செல்லும் நிகழ்ச்சிகள், மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் என அனைத்தில் இருந்தும் அவர் தீவிரமாக வேலை செய்வது போல புகைப்படங்கள் வெளியாகும். இதனால் அவருக்கு ரசிகர்கள் உருவாகி ரோஹினி ஆர்மி என்ற இணையப்பக்கமும் உருவாக்கப்பட்டது. ஆனால் அதேசமயம் அவர் மீது விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில் 2 ஆண்டுகளாக சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த அவர் 4 மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாடு இசை கவின் கலைக் கல்லூரியின் பதிவாளராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து அவர் அந்த பதவியை ஏற்ற நான்கே மாதங்களில் மீண்டும் இப்போது அவரை  மத்திய அரசின் உயர்கல்வித்துறை துணைச் செயலாளராக இடமாற்றம் செய்துள்ளார்.
 

எல்லாம் காட்டு

டெல்லியில் ராகுல், சோனியா காந்தியுடனான சந்திப்பை ரத்து செய்த முதல்வர் விஜய்.. பாஜக அழுத்தமா?

திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் மாயம்.. பதில் சொல்லுங்க கே.என்.நேரு... அறப்போர் இயக்கம்..

விமான நிலையம் வேண்டாம் என்று சொல்லவில்லை.. பரந்தூர் வேண்டாம் என்று தான் சொல்கிறோம்.. தவெக அரசு

பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தம்? கையகப்படுத்தப்பட்ட இடத்தில் சிப்காட்?

அரசியல் தூண்டுதலின் அடிப்படையில் குழப்பம்.. சைதாப்பேட்டை ஹவுசிங் போர்டு விவகாரம் குறித்து தவெக விளக்கம்..

அடுத்த கட்டுரையில்
Show comments