மாடியில் இருந்து தவறி விழுந்த 2வயது குழந்தை...அதிர்ச்சி சம்பவம்

புதன், 12 அக்டோபர் 2022 (14:48 IST)
மதுரவாயல் கங்கையம்மன் 8வது தெரு பகுதியில் தியா என்ற 2 வயது குழந்தை வீட்டின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் கங்கையம்மன் என்ற பகுதியில் உள்ள 8வது தெரு பகுதியில் தியா என்ற  2 வயது குழந்தை வீட்டின் முதல் மாடியில் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது, குடும்பத்தினர் அசந்த நேரம் பார்த்து, குழந்தை பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளது. இதில்,குழந்தை கடுமையான காயமடைந்த நிலையில், குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள்  நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments