வைரஸ் காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாட்டில் முன்கூட்டியே தேர்வு நடத்தப்படுகிறதா?

புதன், 15 மார்ச் 2023 (12:14 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. மேலும் வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே இறுதி தேர்வு நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே தற்போது பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரைவிலான மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தின் இரண்டாஅவது வாரமே ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும் ஆனால் தற்போது வைரஸ் காய்ச்சல் காரணமாக முன்கூட்டியே தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. 
 
ஒன்று முதல் ஒன்பது வகுப்புகளுக்கு ஏப்ரல் 24 முதல் 30 வரை தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் இரண்டாவது வாரமே தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

விவசாயக் கடன் தள்ளுபடி!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..

இந்த கண்றாவியை பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?!.. முக ஸ்டாலின் ஆவேசம்...

ஆதவை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சரவணன்!.. தவெகவில் இணைகிறாரா?...

ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைகிறார்களா? திருச்சி கிழக்கு உள்பட நான்கிலும் வெற்றி பெற்றால் 111..

ஆர்டிஇ திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேடு: தவெக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments