காங்கிரஸ் வழக்கறிஞர்கள் தாக்குதல்: தங்கபாலு கண்டனம்
மதுரையில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் அவர்களது அலுவலகத்தைத் தாக்கி சேதப்படுத்தி, அங்கிருந்த காங்கிரஸ் கொடிக்கம்பத்தை வெட்டிச் சாய்த்த சில சமூகவிரோதிகளின் வன்முறைச் செயலுக்கு கண்டனம் தெரிவிக்க மதுரை காங்கிரஸ் வழக்கறிஞர்கள் நேற்று ஜனநாயக வழியில் அமைதியாக நீதிமன்றத்திற்கு முன்பு கூடினர்.
ஆனால் தமிழின துரோகிகள் சிலர் திடீரென்று அங்கே தடி, கம்பு போன்றவைகளோடு வந்து தடை செய்யப்பட்ட விடுதலைப்புலி இயக்கத்தை ஆதரித்தும், சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய தலைவர்கள் ஒழிக என்றும் வெறித்தனமாக கூக்குரலிட்ட வண்ணம் தடி, கம்புகளால் காங்கிரஸ் வழக்கறிஞர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். மேலும் அவர்களது கையிலிருந்த காங்கிரஸ் கொடிகளை பிடுங்கி அவற்றை தீவைத்து கொளுத்தியுள்ளனர்.
அண்மைக் காலமாக சமூகவிரோதச் செயலில் ஈடுபடும் தமிழினத் துரோகிகளின் இதுபோன்ற வன்முறைத் தாக்குதல்கள் காங்கிரஸ் சகோதரர்கள் மீதும், அலுவலகங்கள் மீதும் தொடர்ந்து நடைபெற்று வருவது பொறுத்துக்கொள்ள முடியாத வேதனையாகும்.
மதுரையில் நேற்று காங்கிரஸ் வழக்கறிஞர்களை தாக்கிய வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதோடு இனியும் வன்செயல் நிகழ்வுகள் நடைபெறாமல் தடுத்திட காவல்துறை கடுமையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று தங்கபாலு வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் தமிழின துரோகிகள் சிலர் திடீரென்று அங்கே தடி, கம்பு போன்றவைகளோடு வந்து தடை செய்யப்பட்ட விடுதலைப்புலி இயக்கத்தை ஆதரித்தும், சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய தலைவர்கள் ஒழிக என்றும் வெறித்தனமாக கூக்குரலிட்ட வண்ணம் தடி, கம்புகளால் காங்கிரஸ் வழக்கறிஞர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். மேலும் அவர்களது கையிலிருந்த காங்கிரஸ் கொடிகளை பிடுங்கி அவற்றை தீவைத்து கொளுத்தியுள்ளனர்.
அண்மைக் காலமாக சமூகவிரோதச் செயலில் ஈடுபடும் தமிழினத் துரோகிகளின் இதுபோன்ற வன்முறைத் தாக்குதல்கள் காங்கிரஸ் சகோதரர்கள் மீதும், அலுவலகங்கள் மீதும் தொடர்ந்து நடைபெற்று வருவது பொறுத்துக்கொள்ள முடியாத வேதனையாகும்.
மதுரையில் நேற்று காங்கிரஸ் வழக்கறிஞர்களை தாக்கிய வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதோடு இனியும் வன்செயல் நிகழ்வுகள் நடைபெறாமல் தடுத்திட காவல்துறை கடுமையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று தங்கபாலு வலியுறுத்தியுள்ளார்.
