நிலவரி உயர்த்தப்படவில்லை: கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்
அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் நிலவரி உயர்த்தப்படவில்லை என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி மும்மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலவரியின் மீதான தலவரி மற்றும் தல மேல் வரி ஆகியவை எனது ஆட்சிக்காலத்தில் உயர்த்தப்பட்டதாகத் தெரிவித்து அதற்கான ஆணை 12.8.2002 அன்று வெளியிடப்பட்டிருப்பதாக கருணாநிதி கூறியிருக்கிறார்.
இதில் உள்ள உண்மை நிலை என்னவென்றால், இரண்டாவது மாநில நிதி ஆணையத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிப் பகிர்வு பற்றிய பரிந்துரைகளின் மீதான ஆணையை வெளியிடும்போது தல வரி மற்றும் தல மேல் வரி ஆகியவற்றையும் உயர்த்தி, இது தொடர்பான தொடர் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் எடுக்குமாறு நிதித்துறை அறிவுறுத்தியது.
ஆனால் 2006 ஆம் ஆண்டு நான் ஆட்சியில் இருக்கும்வரை தல வரி மற்றும் தல மேல் வரி ஆகியவற்றை உயர்த்துவதற்கான ஆணையை சம்பந்தப்பட்ட துறை பிறப்பிக்கவில்லை. எனது ஆட்சிக்காலத்தில் தல வரி ஒரு ரூபாயில் இருந்து இரண்டு ரூபாயாகவும், தல மேல் வரி ஐந்து ரூபாயில் இருந்து ஏழு ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருந்தால், 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் எண் 40 நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது ஏன்? இந்த சட்டத் திருத்தம் பற்றி கருணாநிதி மறந்து விட்டாரா அல்லது மறைத்து விட்டாரா?
இது மட்டுமல்லாமல், 2002 ஆம் ஆண்டு ஆணையில் தல மேல் வரியை 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாக உயர்த்த நிதித்துறை அறிவுறுத்தியது. ஆனால் 2008 ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்தில் தல மேல் வரியை 7 ரூபாய்க்கு குறையாமல் 10 ரூபாய்க்கு மிகாமல் வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து முதலமைச்சர் கருணாநிதி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது.
தன்னுடைய அறிக்கையின் மூலமே தான் விவசாயிகளின் விரோதி என்பதை முதலமைச்சர் கருணாநிதி நிரூபித்து விட்டார். எனவே இனிமேலாவது என் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு, தி.மு.க அரசால் 2008ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்தின் மூலம் உயர்த்தப்பட்ட தலவரி மற்றும் தலமேல் வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும்,
மூன்று மடங்குக்கும் மேலாக விலைவாசி உயர்ந்துள்ள சூழ்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், எந்தவித நிபந்தனையும் இன்றி எனது ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டதை விட மும்மடங்கு கூடுதலாக அனைத்துப் பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கட்டாய வரி வசூலிப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் தமிழக விவசாயிகளின் சார்பில் முதலமைச்சர் கருணாநிதியை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதில் உள்ள உண்மை நிலை என்னவென்றால், இரண்டாவது மாநில நிதி ஆணையத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிப் பகிர்வு பற்றிய பரிந்துரைகளின் மீதான ஆணையை வெளியிடும்போது தல வரி மற்றும் தல மேல் வரி ஆகியவற்றையும் உயர்த்தி, இது தொடர்பான தொடர் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் எடுக்குமாறு நிதித்துறை அறிவுறுத்தியது.
ஆனால் 2006 ஆம் ஆண்டு நான் ஆட்சியில் இருக்கும்வரை தல வரி மற்றும் தல மேல் வரி ஆகியவற்றை உயர்த்துவதற்கான ஆணையை சம்பந்தப்பட்ட துறை பிறப்பிக்கவில்லை. எனது ஆட்சிக்காலத்தில் தல வரி ஒரு ரூபாயில் இருந்து இரண்டு ரூபாயாகவும், தல மேல் வரி ஐந்து ரூபாயில் இருந்து ஏழு ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருந்தால், 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் எண் 40 நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது ஏன்? இந்த சட்டத் திருத்தம் பற்றி கருணாநிதி மறந்து விட்டாரா அல்லது மறைத்து விட்டாரா?
இது மட்டுமல்லாமல், 2002 ஆம் ஆண்டு ஆணையில் தல மேல் வரியை 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாக உயர்த்த நிதித்துறை அறிவுறுத்தியது. ஆனால் 2008 ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்தில் தல மேல் வரியை 7 ரூபாய்க்கு குறையாமல் 10 ரூபாய்க்கு மிகாமல் வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து முதலமைச்சர் கருணாநிதி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது.
தன்னுடைய அறிக்கையின் மூலமே தான் விவசாயிகளின் விரோதி என்பதை முதலமைச்சர் கருணாநிதி நிரூபித்து விட்டார். எனவே இனிமேலாவது என் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு, தி.மு.க அரசால் 2008ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்தின் மூலம் உயர்த்தப்பட்ட தலவரி மற்றும் தலமேல் வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும்,
மூன்று மடங்குக்கும் மேலாக விலைவாசி உயர்ந்துள்ள சூழ்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், எந்தவித நிபந்தனையும் இன்றி எனது ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டதை விட மும்மடங்கு கூடுதலாக அனைத்துப் பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கட்டாய வரி வசூலிப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் தமிழக விவசாயிகளின் சார்பில் முதலமைச்சர் கருணாநிதியை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
