சேலம் : இலங்கையில் அப்பாவி தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்படுவதை கண்டித்தும், உடனடியாக போரை நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தியும் சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் 4வது நாளாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் மாணவர்களில் 3 பேர் மயக்கமடைந்தனர்.