சென்னை : திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறவும், மக்கள் விருப்பு வெறுப்பின்றி வாக்களிக்க ஏதுவாகவும், இந்திய தேர்தல் ஆணையம் கூடுதலாக நேர்மையான கண்காணிப்பாளர்களை நியமிக்கவும், துணை ராணுவத்தினரை ஈடுபடுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.