மழை, மும்பையில் பலியானவர்களுக்கு தமிழக அமைச்சரவை இரங்கல்
தமிழகத்தில் பெய்து வரும் மழையால் இறந்தவர்களுக்கும், மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களுக்கும் தமிழக அமைச்சரவை இரங்கல் தெரிவித்து அமைதியாக மவுனம் கடைபிடித்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று 33-வது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மும்பையில் நேற்றிரவு பயங்கரவாதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இதுவரை வந்துள்ள செய்தியின்படி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும், காயம்பட்டவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஆயிரத்தை எட்டும் என்றும் தெரிகிறது.
அதற்காகவும், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் பெய்கின்ற அடைமழையின் காரணமாக இதுவரையில் 50க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதற்காகவும் அமைச்சரவைக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தை முதலமைச்சர் கருணாநிதி முன் மொழிந்த பின்னர் அந்தத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனை அறிவுறுத்தும் வகையில் அமைச்சர்கள் ஒரு நிமிடம் எழுந்து நின்று அமைதியாக மவுனம் கடைப்பிடித்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று 33-வது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
|
அதற்காகவும், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் பெய்கின்ற அடைமழையின் காரணமாக இதுவரையில் 50க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதற்காகவும் அமைச்சரவைக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தை முதலமைச்சர் கருணாநிதி முன் மொழிந்த பின்னர் அந்தத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனை அறிவுறுத்தும் வகையில் அமைச்சர்கள் ஒரு நிமிடம் எழுந்து நின்று அமைதியாக மவுனம் கடைப்பிடித்தனர்.
