சென்னை : 1998ஆம் ஆண்டே மத்திய அரசு அனுமதி தந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தராவிட்டால், தமிழ் மக்களை கைவிட்டதாகத்தான் அர்த்தமாகும் என்று கூறியுள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், வீரப்பமொய்லியின் பேட்டிக்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் பதில் என்ன? என்று கேட்டுள்ளார்.