பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை தள்ளி வைக்கப்பட்டது.தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலைக் கூட்டத்தொடர், கடந்த மார்ச்19ஆம் தேதி கூடி மே 14ஆம் தேதிவரை நடந்தது. இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.இன்று காலை அவை கூடியதும், மறைந்த திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வீர. இளவரசன் உள்பட 6 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின்...