புதுடெல்லி வரவிருக்கும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே-விடம் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு வலியுறுத்தும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கூறியிருக்கிறார்.புதுடெல்லியில் புதனன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு தங்கபாலு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார்.இலங்கை தமிழர் பிரச்சினையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதற்காக, பிரதமருக்கு தங்கபாலு நன்றி தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அருண் குமாரையும் தங்கபாலு...