தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இந்தியாவும், சிறிலங்காவும் அறிவித்துள்ள கூட்டு நடவடிக்கை திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று ம.தி.மு.க. பொது செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.webdunia photoFILE இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்களைத் தொடர்ந்து சிறிலங்க கடற்படை தாக்குவதும், சுட்டுக் கொல்வதும் இந்தியக் கடற்படையின் கண்முன்னாலேயே நடைபெற்று வருகையில், தமிழக மக்களையும், மீனவர்களையும் ஏன் இந்திய மக்களையும் திசை திருப்பவும் ஏமாற்றவும், சிங்கள அரசு...