நாமக்கல் அருகே லாரிகள் மோதி விபத்து: 4 பேர் உடல் கருகி பலி
நாமக்கல் அருகே இரண்டு லாரிகள் பயங்கரமாக மோதி தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணல்மேடு என்ற இடத்தில் இருந்து மணலை ஏற்றிக் கொண்டு லாரி ஆட்டையாம்பட்டி என்ற இடத்திற்கு வந்து கொண்டு இருந்தது.
இன்று அதிகாலை 5 மணி அளவில் நாமக்கல்லை அடுத்த புதுப்பட்டி பாலத்தில் லாரி வந்தபோது எதிரே வந்த மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன. இந்த தீ விபத்தில் லாரிகளின் ஓட்டுநர்கள், உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணல்மேடு என்ற இடத்தில் இருந்து மணலை ஏற்றிக் கொண்டு லாரி ஆட்டையாம்பட்டி என்ற இடத்திற்கு வந்து கொண்டு இருந்தது.
இன்று அதிகாலை 5 மணி அளவில் நாமக்கல்லை அடுத்த புதுப்பட்டி பாலத்தில் லாரி வந்தபோது எதிரே வந்த மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன. இந்த தீ விபத்தில் லாரிகளின் ஓட்டுநர்கள், உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
