1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

புதுடெல்லியில் கடும் பனிமூட்டம்: ஸ்தம்பித்தது விமான போக்குவரத்து

புதுடெல்லி பனிமூட்டம் விமான போக்குவரத்து
தலைநகர் புதுடெல்லியில் இன்று காலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.

மும்பை, ஹைதராபாத், சென்னை, லக்னோ, புனே ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் உட்பட 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், காலை நேரத்தில் ஓரளவு பனி மூட்டம் குறைந்ததால், புதுடெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 35 விமானங்கள் கால தாமதமாக புறப்பட்டுச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.
About Writer
Webdunia