1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அ‌ஸ்ஸா‌‌ம் குண்டு வெடிப்பு: ஒருவர் கைது!

அஸ்ஸாம் குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் இயக்கம்
அ‌ஸ்ஸா‌மி‌ல் நட‌ந்தொட‌ர்பகு‌ண்டுவெடி‌ப்‌பி‌லதொட‌ர்புடைஇளைஞ‌ரஒருவரகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்ததீ‌விரமாக ‌விசாரணநட‌‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

அ‌ஸ்ஸா‌‌ம் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக குவகாத்தியில் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு செல்பே‌சி மூலம் எஸ்.எம்.எஸ். தகவல் வந்தது.

அதில், தொடர் குண்டு வெடிப்புக்கு 'இஸ்லாமிய பாதுகா‌ப்பபடை- இந்தியன் முஜாகிதீன் இயக்கம் பொறுப்பு ஏற்பதாகவும், குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.

எஸ்.எம்.எஸ். தகவல் அனுப்பப்பட்ட செல்பே‌சி நம்பர் நாகான் மாவ‌ட்ட‌த்‌தி‌லஉள்ள மொ‌ய்ராபா‌ரி என்ற இடத்தில் நசீர் அகமது என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று காவ‌ல்துறை‌யின‌ரதெரிவித்தனர்.

இதனிடையே, குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஜுல்பிகர் அலி என்ற இளைஞரை காவ‌ல்துறை‌யின‌ரகைது செய்தனர். மொய்ராபாரி பகுதியைச் சேர்ந்த இவருடைய இருச‌க்கவாகன‌மபான்பஜார் பகுதி குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளதையும் காவ‌ல்துறை‌யின‌ரஉறுதி செய்தனர்.
About Writer
Webdunia