1.48 லட்சம் கிராமங்களுக்கு அகண்டஅலைவரிசை இணைப்பு!
அகண்டஅலைவரிசை இணைப்பை மேலும் 1.48 லட்சம் கிராமங்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று இந்தியத் தொலைத் தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் ஒன்றியங்களுக்கு 2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அகண்ட அலைவரிசை (broadband ) வசதியை செய்து தர இருக்கிறது.
தற்போது, 95 விழுக்காடு மாவட்ட தலைமையகங்களுக்கும், சுமார் 44 விழுக்காடு ஒன்றியங்களுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பு தரப்பட்டுள்ளது. இந்த அகண்டஅலைவரிசை இணைப்பை மேலும் 1.48 லட்சம் கிராமங்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது 30,000 கிராமங்கள் மட்டுமே அகண்டஅலைவரிசை இணைப்பு வசதியைப் பெற்றுள்ளது. பி.எஸ்.என்.எல்.-ன் அகண்டஅலைவரிசை இணைப்பு தற்போது 3,261 நகரங்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்த வசதி மேலும் 5,000 நகரங்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீடிக்கப்பட உள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் ஒன்றியங்களுக்கு 2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அகண்ட அலைவரிசை (broadband ) வசதியை செய்து தர இருக்கிறது.
தற்போது, 95 விழுக்காடு மாவட்ட தலைமையகங்களுக்கும், சுமார் 44 விழுக்காடு ஒன்றியங்களுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பு தரப்பட்டுள்ளது. இந்த அகண்டஅலைவரிசை இணைப்பை மேலும் 1.48 லட்சம் கிராமங்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது 30,000 கிராமங்கள் மட்டுமே அகண்டஅலைவரிசை இணைப்பு வசதியைப் பெற்றுள்ளது. பி.எஸ்.என்.எல்.-ன் அகண்டஅலைவரிசை இணைப்பு தற்போது 3,261 நகரங்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்த வசதி மேலும் 5,000 நகரங்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீடிக்கப்பட உள்ளது.
