ஜம்மு- காஷ்மீரில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த முதல்வர் குலாம் நபி ஆசாத், தான் பதவி விலகப் போவதாக அவையில் அறிவித்தார். முன்னதாக, தான் பதவி விலகப் போவதால் நம்பிக்கை வாக்கெடுப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் குலாம் நபி ஆசாத் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம்...