நாட்டின் பணவீக்க விகிதம் 8.24 விழுக்காடாக அதிகரித்துள்ளதையடுத்து ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது குற்றம்சாட்டிய பா.ஜ.க., பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொருளாதார பிரதமரான நீங்கள் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியவில்லையெனில், இந்தியாவை வழி நடத்த முடியவில்லை எனில் பதவி விலகிவிடுங்கள் என்றார்.முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தபோதும்...