பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்.),சாதாரண தொலைபேசி வைத்திருப்பவர்களுக்கு இலவச காப்பீடு செய்து தர போகிறது. இந்த திட்டம் பற்றி இதன் சேர்மனும் செயல் இயக்குநருமான கோயல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் தொலைபேசி வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 ஆயிரத்திற்கு இலவச காப்பீடு வசதி செய்து தர போகின்றோம். அவர்கள் நிரந்த்ரமாக உடல் ஊனமுற்றாலோ அல்லது விபத்தால் மரமடைந்தாலோ, இந்த காப்பீட்டில் இருந்து, நஷ்டஈடாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்....