பங்குச் சந்தையின் குறியீட்டு எண் உயர்வதற்கு காரணம் ஊகவணிகம்தான் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். டில்லியில் நேற்று நடைபெற்ற ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைமை நிர்வாகிகளின் ஐந்தாவது மாநாட்டில் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகரிப்பதும், பிறகு குறைவதும் எனக்கு சில நேரங்களில் கவலையை உண்டாக்குகிறது. ஆனால் இவை சில காலத்திற்கு பின் சரியாகும் என்ற நம்பிக்கை உள்ளது....