திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2023 (18:19 IST)

கோடக் மகிந்தரா வங்கி சிஇஓ உதய் கோடக் ராஜினாமா

uday kotak
கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக மேலாளர் மற்றும் தலைமை  நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து உதய் கோடக்  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 
இந்தியாவின் பிரபல தனியார் வங்கி கோடக் மகிந்தரா பேங்க். கடந்த 2003 ஆம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.

இந்த வங்கியின் துணைத்தலைவர் மற்றும் நிர்வாக உதய் கோடக் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், இன்று, கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக மேலாளர் மற்றும் தலைமை  நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து உதய் கோடக்  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து, வங்கியின் இடைக்கால தலைவராக தீபக் குப்தா பொறுப்பேற்றுள்ளார்.

எனவே, நிர்வாகத்தில் தலையிடாத இயக்குனராக உதய் கோடக் தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது.