மனிதர் என்றால் உடல் தேய்மானம் அடையும் என்பதே யதார்த்தம்… பிட்னெஸ் குறித்து கோலி கருத்து!

திங்கள், 10 ஜனவரி 2022 (19:12 IST)
மூன்றாவது டெஸ்டில் தான் விளையாடுவேன் என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேல் முதுகு பிடிப்பு காரணமாக விராட் கோலி பங்கேற்கவில்லை. இவருக்கு பதிலாக ராகுல் விளையாடினார். போட்டி முடிந்ததும் கடைசி டெஸ்டில் கோலி பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது என தெரிவித்தார். 

இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து மூன்றாவது டெஸ்ட்டில் விளையாடுவதை உறுதி செய்த கோலி மேலும் தன்னுடைய பிட்னெஸ் பற்றியும் பேசியுள்ளார். அதில் ‘நிஜமாகவே எனக்கு முதுகில் தசைபிடிப்பு ஏற்பட்டது. இதற்கு முன்னர் அப்படி நடந்ததில்லை. என்னால் விளையாட முடியாதது குறித்து நான் குற்ற உணர்ச்சி அடைந்தேன். நீங்கள் ஒரு மனிதர் என்றால் உங்கள் உடல் தேய்மானம் அடையும் என்பதே யதார்த்தம். அதை ஏற்றுக்கொள்ள்ளாவிட்டால் வெறுப்படைவீர்கள். பலரால் என்னால் விளையாட முடியாது என்பதை நம்ப முடியவில்லை.’ என்று கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

29 பந்தில் 97 ரன்கள்.. ஐதராபாத்தை அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி... இறுதிக்கு தகுதி பெறுமா ராஜஸ்தான்?

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments