1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 15 ஜூலை 2020 (15:26 IST)

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி அமெரிக்கா சாதனை....

உலக அளவில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடிக்குமேல் அதிகரித்துள்ளது. சுமார் 6 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9.30லட்சத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை  1 லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளது

உலகில் உள்ள அமெரிக்கா, சீனா ஸ்பெயின், ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளே இந்தக் கொரொனா தொற்றுக்கு தகுந்த மருந்து கண்டுபிடிக்க திணறி வருகின்ற நிலையில் இந்தியா அரசு ஊரடங்கு உத்தரவுகளை செயல்படுத்தி திறமையாகவே கையாண்டு மக்களை தொற்றிலிருந்து காப்பாற்றி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பயோ தொழில்நுட்ப நிறுவனமான நிறுவனமான மாடர்னாவில் கொரொனா தடுப்பு மருந்து  கண்டுபிடிக்கப்பட்டு முதற்கட்டமாக அதை மனிதர்களுக்கு சோதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும் இது குறித்து நியூ இங்கிலாந்து ஜெர்னல் மெடிசன் இதழில் வெளியுள்ள ஆய்வு முடிகளில் இந்த தடுப்பு மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வேலை செய்வதாக தெரியவந்துள்ளது. இதனால் கொடூர தொற்றுக்கு அமெரிக்கா தடுப்பூசி கண்டுபிடித்து சாதனை செய்துள்ளது.